உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / காளியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா

காளியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா

குளித்தலை: குளித்தலை, மலையப்ப நகரில் தேவேந்திரகுல தெருவில், புதி-யதாக கட்டப்பட்ட காளியம்மன், பால விநாயகர், பாலமுருகன், கருப்பண்ணசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு தனித்தனி-யாக சன்னதிகள் கட்டப்பட்டது.இதையடுத்து கடந்த அக்., 29ல் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து நேற்று காலை 10:00 மணியளவில், பெரிய பாலம் பரிசல் துறை காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் புனித நீர் எடுத்து வந்தனர். யாக சாலையில் புனித நீர் அடங்கிய கும்பத்திற்கு இரண்டு கால பூஜை செய்யப்பட்டது. காலை 7:45 மணியளவில் புதுகாலனியில் உள்ள வினாயகர் கோவிலுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கோபுர கலசத்திற்கு புனித நீர்ஊற்றினர்.பின்னர், தீபாராதனை காட்டப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடை-பெற்றது. தொடர்ந்து காளியம்மன் கோவிலில் புனித நீர் அடங்-கிய கும்பத்தை, சிவாச்சாரியார்கள் கோவில் சுற்றி வந்து, கோபுர கலசத்திற்கு ஊற்றி வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் செய்தனர்.ஏராளமானோர் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி