மேலும் செய்திகள்
மாரியம்மன் கோவில் பூச்சாட்டு விழா
18-Apr-2025
கரூர்: கரூர் மாரியம்மன் கோவில், வைகாசி திருவிழா வரும் மே, 11 ல் தொடங்குகிறது.கரூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் ஆண்டு-தோறும், வைகாசி திருவிழா வெகு சிறப்பாக நடப்பது வழக்கம். நடப்பாண்டு வரும் மே, 11 ல் கம்பம் நடுதலுடன் விழா தொடங்-குகிறது. அதை தொடர்ந்து, 16 ல் பூச்சொரிதல் விழா, 18ல் காப்பு கட்டுதல், 26ல் தேரோட்டம், 27ல் மாவிளக்கு ஊர்வலம், பால் குடம் ஊர்வலம், அக்னி சட்டி எடுத்தல், 28ல் கம்பம் ஆற்றுக்கு செல்லுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.மேலும், வரும் ஜூன் மாதத்தில் பஞ்ச பிரகாரம், புஷ்ப பல்-லக்கு, ஊஞ்சல் உற்சவம், அம்மன் குடிபுகுதல் ஆகிய நிகழ்ச்சி-களும் நடக்கின்றன.
18-Apr-2025