உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பாசன கிளை வாய்க்காலில் ஆகாய தாமரை ஆக்கிரமிப்பு

பாசன கிளை வாய்க்காலில் ஆகாய தாமரை ஆக்கிரமிப்பு

கரூர்: கரூர் அருகே, பாசன கிளை வாய்க்காலில் முளைத்துள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை அமராவதி அணையில் இருந்து, அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்-டுள்ளது. தற்போது, அரவக்குறிச்சி, க.பரமத்தி, தான்தோன்றி-மலை பஞ்., யூனியன் பகுதிகளில், அமராவதி ஆற்றுப்பகுதியில் நெல் சாகுபடிக்காக பணிகள் நடப்பதால், அமராவதி அணையில் இருந்து, குறைந்தளவே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், கிளை வாய்க்காலில் தண்ணீர் செல்கிறது. இந்நிலையில், கரூர் அருகே, சின்ன குளத்துப்பாளையம் வழியாக செல்லும், அமரா-வதி ஆற்றின் கிளை வாய்க்காலில், பிளாஸ்டிக் பொருட்கள், குப்-பைகள் அதிகளவில் தேங்கியுள்ளன. மேலும், ஆகாய தாமரை செடிகளும் வாய்க்காலில் முளைத்து, படர்ந்துள்ளது. இதனால், நீரோட்டம் தடைப்பட்டுள்ளது. எனவே, அமராவதி ஆற்றின் கிளை வாய்க்காலில் படர்ந்துள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி