உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாயனுார் கதவணைக்கு குறைந்த நீர்வரத்து

மாயனுார் கதவணைக்கு குறைந்த நீர்வரத்து

கரூர்: மேட்டூர் அணையில் இருந்து, காவிரியாற்றில் திறக்கப்பட்ட தண்-ணீரின் அளவு வினாடிக்கு, 5,000 கன அடியாக குறைக்கப்பட்-டுள்ளது. இதனால், கரூர் அருகே மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து, படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று முன்-தினம், மாயனுார் கதவணைக்கு வினாடிக்கு, 8,992 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினா-டிக்கு, 5,359 கன அடியாக தண்ணீர் வரத்து குறைந்தது. அதில், சம்பா சாகுபடி அறுவடை பணிக்காக, 4,509 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. மூன்று பாசன வாய்க்காலில், 850 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.அமராவதி அணை நிலவரம்: திருப்பூர் மாவட்டம், உடுமலைப்-பேட்டை அமராவதி அணைக்கு, நேற்று காலை, 8:00 மணி நில-வரப்படி தண்ணீர் வரத்து, 173 கன அடியாக இருந்தது. அமரா-வதி ஆற்றில் வினாடிக்கு, 500 கன அடி தண்ணீரும், புதிய பாசன வாய்க்காலில், 400 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 86.82 அடியாக இருந்தது. ஆத்துப்பாளையம் அணை: கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 25.58 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி