அமராவதி ஆற்றில் ஆண்சடலம்; போலீசார் விசாரணை
கரூர் :கரூர் அருகே, அமராவதி ஆற்றில் மிதந்த ஆண் உடலை, கைப்பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.கரூர் மாவட்டம், திருமாநிலையூர் அமராவதி ஆற்றுப்பகுதியில், அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத, 35 வயதுடைய ஆண் உடல் மிதப்பதாக, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று, போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.இதையடுத்து, பசுபதிபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, ஆண் உடலை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த வாலிபர் தவறி விழுந்து இறந்தாரா அல்லது வேறு காரணம் ஏதேனும் உள்ளதா என, பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.