உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றவர் கைது

வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றவர் கைது

கரூர், கரூர் அருகே, வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற ஒருவரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம், ஜெகதாபி பகுதியை சேர்ந்தவர் முருகேசன், 50; இவர் கடந்த, 19ல் வீட்டை பூட்டி விட்டு, கரூர் காந்தி கிராமத்தில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது, வீட்டின் பூட்டை உடைத்து எஸ்.வெள்ளாளப்பட்டியை சேர்ந்த நவீன் குமார், 25; ஜோதிவடத்தை சேர்ந்த கோபால கிருஷ்ணன், 25; ஆகியோர், திருட முயன்றுள்ளனர். அதை பார்த்த, அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் நவீன் குமாரை மட்டும் பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர்.கோபால கிருஷ்ணன் தப்பி விட்டார். இதையடுத்து, வெள்ளியணை போலீசார் நவீன் குமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ