உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மயங்கி விழுந்த மெக்கானிக் சிகிச்சை பலனின்றி பலி

மயங்கி விழுந்த மெக்கானிக் சிகிச்சை பலனின்றி பலி

குளித்தலை, குளித்தலை அருகே, மயங்கி விழுந்த மெக்கானிக் உயிரிழந்தார்.குளித்தலை அடுத்த தளும்பகவுண்டனுாரை சேர்ந்தவர் ராஜலிங்கம், 35, பைக் மெக்கானிக். நேற்று முன்தினம் மதியம் 2:00 மணியளவில் வாழ்வார் மங்கலம் ஒத்தக்கடையில் உள்ள, மெக்கானிக் பட்டறையில் பைக் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, நெஞ்சு வலிக்குது என கதறி, தரையில் மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே மெக்கானிக் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து அவரது மனைவி லாவண்யா அளித்த புகார்படி, சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்கு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி