உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குண்டும் குழியுமான சாலை வாகன ஓட்டிகள் திணறல்

குண்டும் குழியுமான சாலை வாகன ஓட்டிகள் திணறல்

கரூர் :தென்னிலை அருகில், வைரமடை - கோவை தேசிய நெடுஞ்சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டுனர்கள் சிரமப்படுகின்றனர்.கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் தென்னிலை அடுத்து வைரமடை உள்ளது. இப்பகுதியில் உள்ள சாலையில், சில இடங்கள் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. ஆயிரக்கணக்கான வாகனங்கள், கல்குவாரி லாரிகள் செல்கின்றன. இதனால், வாகனங்கள் செல்ல மிகவும் சிரமப்படுகின்றன. இரவு நேரங்களில், இரண்டு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் தடுமாறி விழுகின்றனர். கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக சாலையில் பள்ளம் ஏற்பட்டு, தண்ணீர் தேங்கி நிற்கிறது. சாலையை சீரமைக்க நடவடிக்கை தேவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை