உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தேசிய அளவில் சிலம்பம் போட்டி; கரூர் மாணவ, மாணவிகள் தேர்வு

தேசிய அளவில் சிலம்பம் போட்டி; கரூர் மாணவ, மாணவிகள் தேர்வு

கரூர்: கரூர் மாவட்டத்தை சேர்ந்த மூன்று பள்ளி மாணவ, மாணவிகள், தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்-ளனர்.இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் சார்பில், மாநில அளவிலான சிலம்பம் போட்டி (கட்கா பிரிவு) மயிலாடுதுறையில் கடந்த, 21ல் நடந்தது. அதில், 17, 19 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் பிரிவில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவர் சந்துரு, மாணவிகள் ஷஸ்-மிதா, காயத்திரி ஆகியோர் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட, உடற் கல்வி ஆய்வாளர் உமாநாத் சான்றுகளை வழங்-கினார். விரைவில், புதுடெல்லியில் நடக்கவுள்ள, தேசிய அளவிலான சிலம்பம் கட்கா பிரிவு போட்-டியில் பங்கேற்க, சந்துரு, ஷஸ்மிதா, காயத்திரி ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை தமிழ்நாடு அமெச்சூர் கட்கா வெல்பர் அசோஷியேசன் தலைவர் சோலை, பொதுச்செயலாளர் பிரசாத், தலைமை பயிற்சியாளர் முத்துகுமார், கரூர் மாவட்ட பயிற்-சியாளர் வீரமணி ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ