உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நவராத்திரி 8வது நாள் விழா கோவில்களில் சிறப்பு அலங்காரம்

நவராத்திரி 8வது நாள் விழா கோவில்களில் சிறப்பு அலங்காரம்

நவராத்திரி 8வது நாள் விழா கோவில்களில் சிறப்பு அலங்காரம் கரூர், அக். 11-- நவராத்திரி விழா, எட்டாவது நாளையொட்டி, கரூர் கோவில்களில் உற்சவர் சிலைகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. நாடு முழுவதும் நவராத்திரி உற்சவ பெரு விழா கடந்த, 3 ல் தொடங்கியது. நேற்று இரவு எட்டாவது நாளையொட்டி, கரூர் கல்-யாண பசுபதீஸ்வரர் கோவிலில் உள்ள உற்சவர், மகாவிஷ்ணு அலங்காரத்தில் நேற்று இரவு பக்தர்களுக்கு அருள்பா-லித்தார்.அதேபோல், கரூர் மாரியம்மன் கோவிலில் உற்சவர் மாரியம்மன் அலங்காரம், கரூர் கோடீஸ்வரர் கோவில் உற்சவருக்கு அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம், கரூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், உற்சவர் முருகன் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கரூர் தெற்கு காந்திகிராம் விநாயகர் கோவிலில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை