உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

கரூர்: தமிழ்நாடு அனைத்து சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் நாகராஜ் தலை-மையில், கலெக்டர் அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், திருச்சி மாநில செயற்குழு முடிவின்படி, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்சம் ஓய்வூ-தியம், 7,850 ரூபாய் அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதியம், ஈமச்சடங்கு நிதி, மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் உள்-ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மாவட்ட துணைத்தலைவர் மாசிலாமணி, செயலாளர் பாலகிருஷ்ணன், பொரு-ளாளர் மாலதி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பொன் ஜெயராம் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை