ரங்கநாத சுவாமி கோவிலில் 6ம் நாள் பகல் பத்து உற்சவம்
கரூர்: கரூர் அபயபிரதான ரங்கநாத சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகா-தசியையொட்டி, ஆறாவது நாள், பகல் பத்து உற்சவம் நேற்று நடந்தது.கரூர் அபயபிரதான ரங்கநாத சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகா-தசி திருவிழா பகல் பத்து உற்சவத்துடன் கடந்த, 31ல் தொடங்கி-யது. நேற்று ஆறாவது நாள், பகல் பத்து உற்சவம் நடந்தது. அதில், உற்சவர் பெருமாள் அச்ச அவதாரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது, ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். வரும், 9ல் மோகினி அலங்காரம், நாச்சியார் திருக்-கோலத்தில், சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 10 அதி-காலை, 4:30 மணிக்கு, பரமபத சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.