உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் அருகே நாளை பென்சனர் குறைதீர் கூட்டம்: கமிஷனர்

கரூர் அருகே நாளை பென்சனர் குறைதீர் கூட்டம்: கமிஷனர்

கரூர்: திருச்சி மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறு-வனம் சார்பில், பி.எப்., உங்கள் அருகில் மற்றும் பென்சனர் குறைதீர் கூட்டம், கரூர் அருகே நாளை (27ல்) நடக்கிறது.இதுகுறித்து, திருச்சி மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன கமிஷனர் ஆஷிஷ் குமார் திருபாதி வெளியிட்ட அறிக்கை:பி.எப்., உங்கள் அருகில் மற்றும் பென்சனர் குறைதீர் கூட்டம் நாளை காலை, 9:00 மணி முதல் மாலை, 5:45 மணி வரை கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலை காக்காவாடியில் உள்ள ஸ்ரீ ரங்கா பாலிமர்ஸ் நிறுவனத்தில் நடக்கிறது. அதில், தொழில் நிறு-வனங்களின் உரிமையாளர்கள், தொழிலாளர்கள், ஓய்வூதியர்கள் கலந்து கொண்டு குறைகளை, உரிய ஆவணங்களுடன் தெரி-வித்து, தீர்வு பெறலாம்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி