பஸ்கள் நின்று செல்ல மக்கள் கோரிக்கை
பஸ்கள் நின்று செல்லமக்கள் கோரிக்கைகரூர், நவ. 27-கரூர், தான்தோன்றிமலை மில்கேட் நிறுத்தத்தில் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூர், தான்தோன்றிமலை மில்கேட் பஸ் நிறுத்தத்தில் இருந்து, தினமும் நுாற்றுக்கணக்கானோர் கரூர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். ஆனால், மில்கேட் நிறுத்தத்தில் ஷேர் ஆட்டோ, சில டவுன் பஸ்கள் மட்டுமே நின்று செல்கிறது. பெரும்பாலான பஸ்கள் நிறுத்துவதில்லை. அவசர தேவைக்கு, கரூர் நகரத்துக்கு எளிதாக செல்ல முடியாமல், டவுன் பஸ்சுக்கு பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.