உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / விளக்குகள் இல்லாத ரயில்வே குகை வழிப்பாதையால் மக்கள் அவதி

விளக்குகள் இல்லாத ரயில்வே குகை வழிப்பாதையால் மக்கள் அவதி

கரூர் : கரூர் அருகே, புதிதாக அமைக்கப்பட்ட ரயில்வே குகை வழிப்பாதையில், மின் விளக்குகள் இல்லை. இதனால், இரவு நேரத்தில் செல்லும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.நாட்டில் ரயில்வே கேட்டுகளை, நிரந்தமாக மூடும் வகையிலும், விபத்துகளை தவிர்க்கும் வகையிலும், அதிகப்படியான வாகனங்கள் செல்லும் ரயில்வே கேட் பகுதியில், குகை வழிப்பாதை அல்லது மேம்பாலம் கட்டும் நடவடிக்கையில், இந்திய ரயில்வே வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.கரூர்-திருச்சி ரயில்வே வழித்தடத்தில் தொழிற்பேட்டை-சணப்பிரட்டி இடையே குகை வழிப்பாதை கட்டும் பணிகள் சமீபத்தில் நிறைவு பெற்றது. அதை தொடர்ந்து, ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்பட்டது. தற்போது, குகை வழிப்பாதை அமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவு பெற்றதால், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. அதன் வழியாக, பொதுமக்கள் சணப்பிரட்டி உள்ளிட்ட, பல்வேறு கிராம பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். ஆனால், குகைவழிப்பாதையில், இரண்டு பக்கமும் மின் விளக்குகள் இல்லை. இதனால், இரவு நேரத்தில் குகை வழிப்பாதையாக நடந்து செல்லும் பொது மக்கள், வாகனங்களில் செல்வோர் அச்சத்துடன் கடக்கின்றனர். எனவே கரூர் தொழிற்பேட்டை-சணப்பிரட்டி இடையே உள்ள, ரயில்வே குகைவழிப்பாதையில் மின் விளக்குகள் அமைக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ