உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பட்டு போன புளிய மரம் அகற்ற மக்கள் வலியுறுத்தல்

பட்டு போன புளிய மரம் அகற்ற மக்கள் வலியுறுத்தல்

கிருஷ்ணராயபுரம், கோவக்குளம் பகுதியில், பட்டுப்போன புளிய மரம் விழும் நிலையில் உள்ளதால், மக்கள் அச்சத்துடன் சாலையில் செல்கின்றனர்.கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வார்டு எண், 13ல் உள்ள, சாலை அருகில் பெரிய புளிய மரம் உள்ளது. தற்போது மரம் பட்டு போயுள்ளது. மேலும் மழை காலம் என்பதாலும், காற்று வீசுவதாலும், புளிய மரத்தின் கிளைகள் ஒவ்வொன்றாக கீழே உதிர்ந்து விழுகிறது. சாலை அருகில் மரம் இருப்பதால், வாகனங்களில் செல்வோர், அப்பகுதி வழியாக நடந்து செல்வோர் அச்சப்படுகின்றனர்.பட்டுப்போன புளிய மரத்தை அகற்ற வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். இதுவரை மரம் அகற்றப்படாமல் இருப்பதால், அச்சத்துடன் மக்கள் சென்று வருகின்றனர். விரைவில் புளிய மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை