மருந்து வணிகர் நல சங்கம் சிறப்பு பொதுக்குழு கூட்டம்
கரூர் :கரூர் மாவட்ட மருந்து வணிகர் நல சங்க சிறப்பு பொதுக்குழு கூட்டம், மாவட்ட தலைவர் முகமது அலி தலைமையில், தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.அதில், போதைக்காக தவறாக பயன்படுத்தும் மருந்துகள் மற்றும் கருகலைப்பு மருந்துகளை கையாள்வது குறித்து, கரூர் மருந்துகள் ஆய்வாளர் செந்தில் வேலன் விளக்கம் அளித்து பேசினார். கூட்டத்தில், குளித்தலை மருந்துகள் ஆய்வாளர் மாரிமுத்து, சங்க செயலாளர் ஜெயக்குமார், பொருளாளர் ரவி உள்பட மருந்து விற்பனையாளர்கள் பங்கேற்றனர்.