உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் பகுதிகளில் அன்னாசி விற்பனை ஜோர்

கரூர் பகுதிகளில் அன்னாசி விற்பனை ஜோர்

கரூர், கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், அன்னாசி பழம் விற்பனை சூடுபிடித்துள்ளது.தமிழகத்தில் கன்னியாகுமரி, நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை உள்ளிட்ட சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் அன்னாசி பழம் சாகுபடி செய்யப்படுகிறது. பெரும்பாலும் தமிழக தேவைக்கு, கேரளா மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்படுகிறது.கேரளா மாநிலத்தில் தற்போது, அன்னாசி பழம் சீசன் தொடங்கியுள்ளது. இதனால், கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட்டுக்கு அன்னாசி பழம் வரத்து அதிகரித்துள்ளது. மேலும், திருச்சி, ஈரோடு மற்றும் கோவை சாலைகளில், கேரளாவில் இருந்து வநத் வியாபாரிகள் அன்னாசி பழங்களை விற்பனை செய்கின்றனர். வரத்து அதிகரித்துள்ளதால் ஒரு கிலோ அன்னாசி பழம், 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை