உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வாய்க்காலில் செடிகள் வளர்ச்சி மழைநீர் செல்வதில் பாதிப்பு

வாய்க்காலில் செடிகள் வளர்ச்சி மழைநீர் செல்வதில் பாதிப்பு

கிருஷ்ணராயபுரம், டிச. 18-முனையனுார் கிராமத்தில் உள்ள வாய்க்காலில், செடிகள் வளர்ந்து வருவதால் மழைநீர் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.கிருஷ்ணராயபுரம் அடுத்த முனையனுார், கீழ முனையனுார் ஆகிய பகுதிகளில் மழை நீர் செல்லும் வடிகால் வழிகள் உள்ளது. இதில் அதிகமான செடிகள் வளர்ந்து வருகிறது. மழை காலங்களில் வடிகால் வாய்க்கால் வழியாக செல்லாமல், சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் செல்லும் போது சிரமப்படுகின்றனர். எனவே, பஞ்சாயத்து நிர்வாகம் மழை நீர் வடிந்து செல்லும் வகையில், வடிகால் வாய்க்காலை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ