பெற்றோரை தாக்கி மகள் கடத்தல் வழக்கு பதிவு செய்த போலீசார்
குளித்தலை: குளித்தலை அடுத்த நங்கவரம் டவுன் பஞ்., நச்-சலுார் உப்பாறு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் மனைவி விஜயலட்சுமி, 37. இவரது, 17 வயது மகளுக்கும், வெள்ளைக்கல் பகுதியை சேர்ந்த பாப்பண்ணன் மகன் ரஞ்சித், 28, என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு 7:30 மணியளவில் வீட்டிலிருந்த சிவக்குமார், அவரது மனைவி விஜயலட்சுமி ஆகிய இருவரையும் தகாத வார்த்தையால் திட்டி, சிவகுமாரை கையால் தாக்கி தள்ளிவிட்டு, வீட்டில் இருந்த அவரது மகளை கடத்திச் சென்றனர்.இதுகுறித்து, சிறுமியின் தாய் விஜயலட்சுமி கொடுத்த புகார்படி, நங்கவரம் போலீசார் ரஞ்சித் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வரு-கின்றனர்.