உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / உயர் மின்கோபுர விளக்கு அமைக்க நிதியுதவி வழங்கல்

உயர் மின்கோபுர விளக்கு அமைக்க நிதியுதவி வழங்கல்

கரூர் புஞ்சை தோட்டக்குறிச்சி டவுன் பஞ்சாயத்தில், மின்கோபுர விளக்குகள் அமைக்க டி.என்.பி.எல்., ஆலை சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.புகழூர், தமிழ்நாடு செய்திதாள் காகித ஆலை நிறுவனம் சார்பில், சமுதாய மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஆலையின் அருகே உள்ள புஞ்சை தோட்டக்குறிச்சி டவுன் பஞ்., பகுதிகளில் உயர் மின் கோபுர விளக்குகள் அமைப்பதற்காக, 14.70 லட்சம் ரூபாய் காசோலை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஆலை பொது மேலாளர் (மனிதவளம்) கலைச்செல்வன் தலைமை வகித்தார். புஞ்சை தோட்டக்குறிச்சி டவுன் பஞ்சாயத்து தலைவர் ரூபாவிடம், காசோலை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !