மேலும் செய்திகள்
மக்கள் குறைதீர் கூட்டம்: 434 மனுக்கள் குவிந்தன
29-Apr-2025
கரூர்: கரூர் கலெக்டர் அலுவலகத்தில், பொது மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடந்தது. இதில், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, வங்கிக்கடன்கள், பட்டா மாறுதல், வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள், 315 மனுக்கள் அளித்தனர். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக ஒருவருக்கு காதொலி கருவி, மற்றொருவருக்கு மூன்று சக்கர சைக்கிள் என மொத்தம் இருவருக்கு, 14,323 ரூபாய் மதிப்பிலான உபகரணங்களை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில், குளித்தலை சப்-கலெக்டர் சுவாதி, மாவட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ், கரூர் ஆர்.டி.ஓ., முகமது பைசல், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மோகன்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.
29-Apr-2025