உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / லாலாப்பேட்டை பகுதியில் மழை; விவசாயிகள் மகிழ்ச்சி

லாலாப்பேட்டை பகுதியில் மழை; விவசாயிகள் மகிழ்ச்சி

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் பரவலாக லேசான மழை பெய்-தது.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட லாலாப்பேட்டை, பிள்ளபாளையம், கொம்பாடிப்பட்டி, சிந்தலவாடி, மகிளிப்பட்டி, புனவாசிப்பட்டி ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு லேசான மழை பெய்தது.மழையால் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள வாழை, வெற்-றிலை மற்றும் மரவள்ளிக்கிழங்கு, மானாவாரி பயிர்களான எள், சோளம், துவரை ஆகிய பயிர்களுக்கு மழைநீர் கிடைத்தது.மழை பெய்ததால் பயிர்கள் பசுமையாக செழிப்பாக வளர்ந்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை