ரஸ்தாளி வாழைத்தார் ரூ.300க்கு விற்பனை
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, வீரவள்ளி, வீரகுமாரன்பட்டி, கருப்-பத்துார், கள்ளப்பள்ளி, சிந்தலவாடி, மகிளிப்பட்டி, நந்தன் கோட்டை, பொய்கைப்புத்துார் ஆகிய பகுதிகளில், வாழை சாகு-படியில் விவசாயிகள் அதிகம் ஈடுபட்டுள்ளனர். விளைந்த வாழைத்தார்களை அறுவடை செய்து, லாலாப்பேட்டை வாழைக்காய் ஏல கமி ஷன் மண்டிக்கு கொண்டுவந்து விற்பனை செய்கின்றனர். அதன்படி, நேற்று, பூவன் வாழைத்தார், 250 ரூபாய், கற்பூரவள்ளி, 150 ரூபாய், ரஸ்தாளி, 300 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. லாலாப்பேட்டை, குளித்-தலை, கரூர் பகுதிகளை சேர்ந்த சில்லறை வியாபாரிகள், வாழைத்தார்களை வாங்கிச்சென்றனர்.