மேலும் செய்திகள்
வழங்கல் அலுவலர் பொறுப்பேற்பு
25-Sep-2024
கரூர்: புகழூர் தாலுகா அலுவலகத்தில், வட்ட வழங்கல் துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடந்தது. அதில், புகழூர் தாலுகாவுக்குட்பட்ட, 27 வருவாய் கிராமங்களை சேர்ந்த, குடும்ப அட்டைதாரர்கள் புதிய குடும்ப அட்டை கோருதல், பெயர் சேர்த்தல், நீக்குதல், மொபைல் எண் சேர்ப்பு உள்ளிட்ட பல்வேறு குறைகள் அடங்கிய மனுக்களை, வட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணவேணியிடம் வழங்கினர். அப்போது, பொது வினியோக திட்ட ஆய்வாளர் ஆனந்தராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
25-Sep-2024