ஓய்வு பெற்ற அலுவலர் சங்க மாதாந்திர கூட்டம்
கரூர் :தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், துணைத்தலைவர் சிவக்கொழுந்து தலைமையில், மாதாந்திர கூட்டம் நடந்தது.அதில், குடும்ப பாதுகாப்பு நிதி, இரண்டு லட்சத்து, 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தர வேண்டும், அனைத்து ஓய்வூதியர்களுக்கு, 70 ஆண்டுகள் நிறைவு பெற்றால், கூடுதல் ஓய்வூதியம், 10 சதவீதமும், 75 ஆண்டுகள் நிறைவு பெற்றால், 15 சதவீதமும் முறைப்படுத்தி வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதியர்களுக்கு விழா முன்பணம் அளிக்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், இணைத்தலைவர் சண்முகம், பொதுச்செயலாளர் சிவசங்கரன், அமைப்பு செயலாளர் சதாசிவம், பொருளாளர் கருப்பன் உள்பட, பலர் பங்கேற்றனர்.