உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சேலம் கிழக்கு மாவட்ட த.வெ.க., செயலருக்கு 15 நாள் சிறை

சேலம் கிழக்கு மாவட்ட த.வெ.க., செயலருக்கு 15 நாள் சிறை

கரூர், கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த, 27ம் தேதி நடந்த த.வெ.க., பிரசார பொதுக்கூட்டத்தில், அக்கட்சி தலைவர் விஜய் பேசினார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தனியார் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனரை த.வெ.க.,வினர் தாக்கிய விவகாரம் தொடர்பாக, அக்கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட செயலர் வெங்கடேசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சேலத்தில் கைது செய்யப்பட்ட அவரை, கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று இரவு, 8:00 மணிக்கு அழைத்து வந்தனர். அங்கு விசாரணை நடத்திய பின், கரூர் ஜே.எம்.,1 நீதிமன்றத்தில், வெங்கடேசன் அஜர்படுத்தப்பட்டார். வழக்கை நீதிபதி பரத்குமார் விசாரித்து, வெங்கடேசனை, 15 நாள் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை