உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் குழந்தை வேலு தெருவில் கழிவுநீர் தேக்கத்தால் சுகாதார கேடு

கரூர் குழந்தை வேலு தெருவில் கழிவுநீர் தேக்கத்தால் சுகாதார கேடு

கரூர் குழந்தை வேலு தெருவில்கழிவுநீர் தேக்கத்தால் சுகாதார கேடுகரூர், அக். 25- கரூர், குழந்தை வேலு தெருவில் கழிவுநீர் தேக்கத்தால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.கரூர் ரயில்வே ஸ்டேஷன் சாலையில், 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள சாக்கடைகள் முறையாக சுத்தம் செய்யப்படுவதில்லை. அங்குள்ள குழந்தை வேலு தெருவில் உள்ள சாக்கடையில், பிளாஸ்டிக் காகிதங்கள், கழிவுகள் அடைத்துள்ளன. கழிவுநீர் தேங்கி நிற்கிறது. தற்போது மழை காலங்களில் மழைநீர் சாலையில் செல்லும் நிலை ஏற்படுகிறது.இப்பகுதியில் துர்-நாற்றம் வீசுவதோடு, கொசு உற்பத்தி மையமாக மாறி உள்ளது. இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாக்கடை கால்வாய்களை துார்வாரி, தினமும் சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். தேங்கிய கழிவு நீரை உடனடியாக அகற்ற வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ