உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,049 வழக்குகளுக்கு தீர்வு

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,049 வழக்குகளுக்கு தீர்வு

கரூர்: கரூர் மற்றும் குளித்தலையில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில், 1,049 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், நாடு முழுவதும் இரண்டு மாதங்களுக்கு, ஒரு முறை தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்து வருகிறது. நேற்று கரூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் மற்றும் அரவக்குறிச்சி நீதிமன்றங்களில், தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது.அதில் வங்கி சிவில் வழக்குகள், காசோலை வழக்கு, மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்கு உள்பட, 1,226 வழக்குகள் சமரச தீர்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இறுதியாக, 1,049 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு, 10 கோடியே, 59 லட்சத்து, 85 ஆயிரத்து, 880 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது.கரூரில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தை, மாவட்ட தலைமை நீதிபதி சண்முக சுந்தரம் தொடங்கி வைத்தார். அப்போது, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான சொர்ணகுமார் (பொ) மற்றும் வக்கீல்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை