கிருஷ்ணராயபுரம் முருகன் கோவிலில் சஷ்டி வழிபாடு
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம், முருகன் கோவிலில் சஷ்டி சிறப்பு வழிபாடு பூஜை நடந்தது.கிருஷ்ணராயபுரம், பாலதண்டாயுதபாணி முருகன் கோவிலில் சஷ்டியை முன்னிட்டு முருகனுக்கு பால், தயிர், இளநீர், பழரசம், சந்தனம், பன்னீர், மஞ்சள் மற்றும் திரவியப்பொடி ஆகிய பொருட்கள் கொண்டு அபிேஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர் மாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்து தீபாரா-தனை காட்டப்பட்டது. கிருஷ்ணராயபுரம் சுற்று வட்டார பகுதி-களில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர்.