தந்தையை தாக்கிய மகனுக்கு காப்பு
ப.வேலுார்: ப.வேலுார், வடக்கு நல்லியாம்பாளையத்தை சேர்ந்தவர் முரு-கேசன், 60; கூலித்தொழிலாளி, இவரது மனைவி வசந்தா, 53; இவர்களது மகன் மணிவேல், 29; லாரி டிரைவர். முருகேசனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, முருகேசன் வழக்-கம்போல் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.அப்போது, முருகேசனுக்கும், மணிவேலுக்கும் வாக்குவாதம் ஏற்-பட்டு கைகலப்பாக மாறியது. இதில், முருகேசன் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது.அருகில் இருந்தவர்கள் முருகேசனை மீட்டு, ப.வேலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து புகார்-படி, ப.வேலுார் போலீசார், மணிவேலை கைது செய்தனர்.