உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மைசூரு-திருநெல்வேலிக்கு கரூர் வழியாக சிறப்பு ரயில்

மைசூரு-திருநெல்வேலிக்கு கரூர் வழியாக சிறப்பு ரயில்

கரூர்: 'மைசூரு-திருநெல்வேலி இடையே, கரூர் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது' என, தென்னக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பு: வரும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு, கர்நாடகா மாநிலம் மைசூருவில் இருந்து திரு-நெல்வேலி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்-படி, மைசூருவில் இருந்து வரும், 26 இரவு, 8:15 மணிக்கு சிறப்பு ரயில் (எண்-06241) புறப்பட்டு மறுநாள் நாள் மாலை, 10:50 மணிக்கு திருநெல்வேலிக்கு செல்லும். இந்த ரயில் சேலத்-துக்கு வரும், 27 அதிகாலை, 3:15 மணிக்கும், நாமக்கல்லுக்கு காலை, 3:25 மணிக்கும் வரும். கரூருக்கு காலை, 4:29 மணிக்கு வந்துவிட்டு, 4:30 மணிக்கு புறப்படும்.அதேபோல், திருநெல்வேலி-மைசூருவுக்கு சிறப்பு ரயில் (எண்-06242) வரும், 27 மதியம், 3:40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள், 28 அதிகாலை, 5:50 மணிக்கு மைசூரை அடையும். இந்த ரயில், கரூருக்கு இரவு, 8:00 மணிக்கும், நாமக்கல்லுக்கு இரவு, 8:44 மணிக்கும், சேலத்துக்கு இரவு, 9:05 மணிக்கு வந்து செல்லும்இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ