உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சக்தி நகர் சாலையில் தேங்கிய மழை நீரால் அவதி

சக்தி நகர் சாலையில் தேங்கிய மழை நீரால் அவதி

சக்தி நகர் சாலையில்தேங்கிய மழை நீரால் அவதிகிருஷ்ணராயபுரம், நவ. 28-கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து, சக்தி நகர் சாலையில் மழை நீர் தேங்கி வருவதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட, சக்தி நகரில் மண் சாலை உள்ளது. இதன் வழியாகத்தான் கடை வீதிக்கும் மற்ற இடங்களுக்கும் மக்கள் சென்று வருகின்றனர். கடந்த சில நாட்களாக பெய்து வரும்மழையால், சாலையில் அதிகமான மழை நீர் தேங்கி வருகிறது. இதனால் மக்கள் நடந்தும், வாகனங்களில் செல்லும்போதும், சிரமப்படுகின்றனர். எனவே, சாலையில் மழை நீர் தேங்காமல் இருக்கும் வகையில், மண் கொட்டி சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தெருவில் மழை நீர் வடிகால் வாய்க்கால் அமைக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ