மேலும் செய்திகள்
சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.1.56 கோடி கடன் உதவி
23-Nov-2024
கரூர், நவ. 27-தாட்கோ மூலம் மூன்று ஆண்டுகளில், 651 பயனாளிகளுக்கு, 21.25 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.அரவக்குறிச்சி அருகில், நஞ்சைகாளகுறிச்சியில் தாட்கோ மூலம் நண்ணிலம் மகளிர் நில உடமை திட்ட பயனாளிகளிடம் கருத்து கேட்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற கலெக்டர் தங்கவேல், பின் கூறியதாவது:ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டம், நண்ணிலம் மகளிர் நில உடமை திட்டம், சுய உதவி குழுக்களுக்கான பொருளாதார கடன் உதவி திட்டம், கல்வி கடன் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில், மாவட்டத்தில் தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 506 ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு, 3.47 கோடி ரூபாய் மானியத்துடன், 12.39 கோடி ரூபாய் வங்கி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.மகளிர் சுய உதவி குழுக்களுக்கான பொருளாதார கடன் உதவி திட்டத்தின் மூலமாக, 73 ஆதிதிராவிடர் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, 3.19 கோடி ரூபாய் மானியத்தில், 6.38 கோடி வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி மூன்று ஆண்டுகளில், 651 ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு, 7.82 கோடி மானியத்தில், 21.25 கோடி ரூபாய் வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
23-Nov-2024