கொடியேற்றத்துடன் தைப்பூச திருவிழா துவக்கம்
கரூர்: கரூர் மாவட்டம், வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆண்டு தோறும் தைப்பூச திருவிழா நடந்து வருகி-றது. நடப்பாண்டு, நேற்று காலை கொடியேற்றத்துடன் தைப்பூச திருவிழா தொடங்கியது. அதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரி-சனம் செய்தனர்.வரும், 8 வரை கட்டளைதாரர்களின் மண்டக படி பூஜை மற்றும் சிறப்பு வாகனங்களில் உற்சவர் திருவீதி உலா நடக்கிறது. வரும், 9 ல் திருக்கல்யாண உற்சவம், 11 மாலை, 4:00 மணிக்கு தைப்பூச திருவிழாவையொட்டி தேரோட்டம் நடக்கிறது.