உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வெங்கடரமண சுவாமி கோவிலில் கருட சேவையுடன் விழா துவக்கம்

வெங்கடரமண சுவாமி கோவிலில் கருட சேவையுடன் விழா துவக்கம்

கரூர்: தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், மாசி மக தெப்ப திருவிழா நேற்று, வெள்ளி கருட சேவையுடன் தொடங்கியது.கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் மாசி மாதம், தேர் திருவிழா, தெப்ப திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு, நேற்று சிறப்பு பூஜை யுடன் விழாவுக்காக, பூர்வாங்க பணிகள் தொடங்கின. அப்போது, வெள்ளி கருட சேவையில், மூலவர் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.நாளை காலை, 9:00 மணிக்கு மாசி மக தெப்ப திருவிழாவுக்காக கொடியேற்ற விழா நடக்கிறது. வரும், 10ல் திருக்கல்யாண உற்வசம், 12ல் தேர் திருவிழா, 14ல் தெப்பத்தேர் உற்சவம், 15, 17ல் வெள்ளி கருடசேவை, வரும் மார்ச், 19ல் ஆளும் பல்லாக்கு, 20ல் ஊஞ்சல் உற்சவம், 21ல் புஷ்பயாகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை