உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பைக்கில் இருந்து தவறி விழுந்தவர் பலி

பைக்கில் இருந்து தவறி விழுந்தவர் பலி

கரூர்: கரூர் மாவட்டம், பெரிய கோதுார் பகுதியை சேர்ந்தவர் மாதேஷ், 40. இவர் கடந்த, 5 ல் கரூர் அருகே வடிவேல் நகர் சாலையில், பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, நிலை தடுமாறி, பைக்கில் இருந்து மாதேஷ் தவறி கீழே விழுந்தார். படுகாயம் அடைந்த மாதேஷ், திருச்சி அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரி-ழந்தார். மாதேஷின் மனைவி அஸ்வினி, 26; கொடுத்த புகாரின்-படி, கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி