வெங்கடரமண சுவாமி கோவில் திருவிழா தேரை தயார்ப்படுத்தும் பணி தீவிரம்
கரூர்: தான்தோன்றிமலை, கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், புரட்டாசி விழாவுக்காக தேரை தயார்ப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடக்கிறது.பிரசித்தி பெற்ற, கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் புரட்டாசி விழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு கடந்த, 4ல் புரட்டாசி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, நாள்தோறும் சிறப்பு வாகனங்களில், உற்சவர் திரு-வீதி உலா நடந்து வருகிறது. வரும், 10 மாலை, 4:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. பிறகு வரும், 12 காலை, 9:15 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. அதையொட்டி, கோவில் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேரை, தயார்ப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். வரும் 21ல் முத்து பல்-லக்கு, 22ல் ஆளும் பல்லக்கு ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.