மேலும் செய்திகள்
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா
05-Oct-2025
கரூர், நன்செய் புகழூர் மேகபாலீஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை அஷ்டமியை யொட்டி, நேற்று சிறப்பு பூஜை நடந்தது.அதில், மூலவர் கால பைரவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம், குங்குமம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்கள் மூலம் அபி ேஷகம் செய்யப்பட்டது. பிறகு, காலபைரவர் சிறப்பு பூக்கள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.அதேபோல், புன்னம் புன்னைவன நாதர் உடனுறை, புன்னைவன நாயகி கோவில், திருகாடுதுறை மாதேஸ்வரன் கோவில், நத்தமேடு ஈஸ்வரன் கோவில்களிலும், புரட்டாசி மாத தேய்பிறை அஷ்டமியை யொட்டி, கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.* கிருஷ்ணராயபுரம் நெடுஞ்சாலை அருகில் பாலதண்டாயுதபாணி முருகன் கோவில் உள்ளது. நேற்று இங்கு, தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கோவில் வளாகத்தில் உள்ள பைரவருக்கு பல்வேறு வகையான அபிேஷகம் செய்து, மலர் மாலைகள் கொண்டு அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமானோர் பங்கேற்றனர்.
05-Oct-2025