உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வேங்காம்பட்டி சாலையில் முள் செடிகளால் அவஸ்தை

வேங்காம்பட்டி சாலையில் முள் செடிகளால் அவஸ்தை

கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் அடுத்த கருப்பத்துார் பஞ்சாயத்து, வேங்காம்பட்டியில் இருந்து பாலப்பட்டி பிரிவு சாலை வரை தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக ஏராளமான பொதுமக்கள் வாகனங்களிலும், நடந்தும் சென்று வருகின்றனர்.தற்போது, சாலையின் இருபுறமும் அதிகளவில் முள் செடிகள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளன. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை முள் செடிகள் பதம் பார்த்து வருகிறது. மேலும், எதிர் வரும் வாகனங்ளுக்கு ஒதுங்கி வழிவிட முடியாமல் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, சாலையில் வளர்ந்து ஆக்கிரமித்துள்ள முள் செடிகளை முழுமையாக அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை