உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மணல் கடத்திய டிராக்டர், பொக்லைன் பறிமுதல்

மணல் கடத்திய டிராக்டர், பொக்லைன் பறிமுதல்

குளித்தலை: குளித்தலை அடுத்த, வடசேரி பஞ்., பகுதியில் அரசு அனுமதி இன்றி காற்றாற்று மணல், கிராவல் மண் மற்றும் கனிமங்கள் கடத்தப்படுவதாக டி.எஸ்.பி., செந்தில்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, தோகைமலை இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையில் நேற்று முன்தினம் இரவு சோதனை நடத்தினர். அப்போது, வடசேரி தென்னகர் அரியாறு பாலம் அருகே வந்த, டிப்பர் டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனர். உரிய ஆவணம் இல்லாததால் மணல் கடத்தியது தெரியவந்தது.இதையடுத்து டிப்பர் டிராக்டர், பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்த போலீசார், வாகனத்தின் உரிமையாளரும், டிரைவருமான கீழ வெளியூர் வேலுசாமி, 40, பொக்லைன் டிரைவர் முருகேசன், 32, ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.* குளித்தலை அடுத்த, கோவளம் குச்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தனபால், 41, கூலித் தொழிலாளி. நேற்று முன்தினம் காலை 6:00 மணியளவில் மாயனுார் பழைய போலீஸ் ஸ்டேஷன் வழியாக, டயர் மாட்டு வண்டியில் அரை யூனிட் ஆற்று மணல் கடத்தி வந்தார். மாயனுார் போலீசார் சோதனை செய்தபோது, உரிய அனுமதியில்லாமல் கடத்தியது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து தனபாலை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி