மேலும் செய்திகள்
வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை சரிவு
18-Sep-2025
கரூர், சீசன் நிறைவு பெறும் நிலையில், திருமணம் உள்ளிட்ட, சுப விசேஷங்கள் காரணமாக முருங்கைக்காய் விலை அதிகரித்துள்ளது. இதனால், வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.கரூர் மாவட்டத்தில், அரவக்குறிச்சி வட்டாரத்தில் முருங்கை சாகுபடி அதிகளவில் நடந்து வருகிறது. நடப்பாண்டு, தென் மேற்கு பருவமழை துவங்கும் முன், கரூர் மாவட்டத்தில், எதிர்பார்த்த அளவில் மழை பெய்ததால், மானாவாரி நிலங்களில் முருங்கை சாகுபடியை விவசாயிகள் துவக்கினர். வழக்கமாக ஆண்டு தோறும், ஜூலை முதல் செப்டம்பர் வரை, முருங்கைகாய்க்கு சீசன் காலமாகும். இதனால் கரூர், அரவக்குறிச்சி, க.பரமத்தி ஆகிய பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுக்கு முருங்கைக்காய் வரத்து, கடந்த ஒரு வார காலமாக சற்று குறைந்துள்ளது. இந்நிலையில், திருமணம் உள்ளிட்ட சுப விசேஷங்கள் காரணமாக, கடந்த மாதத்தை விட, தற்போது முருங்கைக்காய் விலை அதிகரித்துள்ளது.அரவக்குறிச்சி வட்டாரத்தில், செடி முருங்கை, மரம் முருங்கை மற்றும் கொடி முருங்கை என மூன்று வகைகளில் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது, சீசன் நிறைவு பெறும் நிலையில், முருங்கைக்காய் வரத்து குறைய துவங்கியுள்ளது. ஆனால், திருமணம் உள்ளிட்ட சுப விசேஷங்கள் அதிகளவில் நடந்து வரும் நிலையில் முருங்கைக்காய், கீரை மற்றும் பூ வகைகளை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். ஒரு கிலோ முருங்கைக்காய், 80 முதல், 90 ரூபாய் வரை விற்கிறது.
18-Sep-2025