உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குழியில் பஸ் சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு

குழியில் பஸ் சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு

அரவக்குறிச்சி: சாலையோரம் தோண்டப்பட்ட குழியில், பஸ் சிக்கிக் கொண்-டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.பள்ளப்பட்டியில் இருந்து, கரூர் செல்லும் சாலையில் தமிழ் நகர் பஸ் நிறுத்தம் அமைந்துள்ளது. காவிரி கூட்டு குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக, தோண்டப்பட்ட குழிகளில் மண் சரிவு ஏற்-பட்டுள்ளதால், ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு வாகன ஓட்-டிகள் விபத்துக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நி-லையில், பள்ளப்பட்டியில் இருந்து கரூர் செல்லும் சாலையில் தனியார் பஸ் நேற்று சென்று கொண்டிருந்தது. அப்போது, தமிழ் நகர் பகுதியில் சாலையோரம் பஸ்சை வளைக்க ஓட்டுனர் முற்-பட்டபோது, மண் சரிவால் ஏற்பட்ட குழியில் பஸ் சிக்கிக் கொண்டது. இதனால் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவ-ரத்து பாதிப்பு ஏற்பட்டது. காவிரி கூட்டு குடிநீர் பதிக்கும் பணி, பள்ளப்பட்டி பகுதியில் நிறைவடைந்தாலும், அடிக்கடி மண் சரிவு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் நிலை தொடர்கிறது. நெடுஞ்சாலைத்துறையினர் கவனத்தில் கொண்டு, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை