உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் தவிப்பு

சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் தவிப்பு

கரூர்: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு பிரதட்சணம் சாலையோரம், ஆர்.டி.ஓ., அலுவலகம் செயல்படுகிறது. இந்த பகுதி சாலை-யோரம் வளர்க்கப்படும் கால்நடைகள் அவ்வப்போது, சாலையில் நடந்து செல்வதோடு, ஆர்.டி.ஓ., அலுவலக உட்புறமும் சுற்றித்தி-ரிகிறது. இதன் காரணமாக போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படு-கிறது. கால்நடைகளின் நடமாட்டம் காரணமாக வடக்கு மற்றும் தெற்கு பிரதட்சணம் சாலைகளில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு, விபத்துக்கள் நடக்கின்றன. இதனை கட்டுப்படுத்தும் வகையில் கால்நடைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி