கரூர் ரெங்கநாதர் சுவாமி கோவிலில் உற்சவர் திருவீதி உலா
கரூர்:சித்திரை திருவிழாவையொட்டி, கரூர் அபயபிரதான ரெங்கநாதர் சுவாமி கோவில் சார்பில், நான்காவது நாளாக நேற்று மாலை, திருவீதி உலா நடந்தது.கரூரில், பிரசித்தி பெற்ற அபயபிரதான ரெங்கநாதர் கோவிலில், சித்திரை திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று, சிறப்பு பூக்கள் அலங்காரத்தில் நம்பெருமாள், வெள்ளி கருட வாகனத்தில் திருவீதி உலா வந்தார்.ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். வரும், 8ல் திருக்கல்யாண உற்சவம், 10ல் தேரோட்டம், 11ல் அமராவதி ஆற்றில் தீர்த்தவாரி, 12ல் ஆளும் பல்லக்கு, 13ல் ஊஞ்சல் உற்சவம், 14 ல் புஷ்பயாகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன.