உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரூ.2.34 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவி வழங்கல்

ரூ.2.34 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவி வழங்கல்

கரூர் கரூர் கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடந்தது. இதில், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் கேட்டு, 427 பேர் மனு அளித்தனர்.மாற்றுத்திறனாளிகள் உள்பட, 15 பயனாளிகளுக்கு, 2.34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.கூட்டத்தில் டி.ஆர்.ஓ.,கண்ணன், குளித்தலை சப்-கலெக்டர் சுவாதி ஸ்ரீ, ஆர்.டி.ஓ., முகமது பைசல், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் பாலசக்திகங்காதரன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை