உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மனைவி மாயம்; கணவன் புகார்

மனைவி மாயம்; கணவன் புகார்

கரூர்: கரூர் மாவட்டம், வெண்ணைமலை பகுதியை சேர்ந்தவர் மணி, 55; டைல்ஸ் பதிக்கும் தொழிலாளி. இவரது மனைவி சரோஜா, 48; குடும்ப பிரச்னை காரணமாக கடந்த, 10ல் வீட்டில் இருந்து சரோஜா வெளியே சென்றுள்ளார். இதுவரை வீடு திரும்பவில்லை. பெற்றோர் மற்றும் உறவினர்களின் வீடுகளுக்கும் சரோஜா செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த சரோஜாவின் கணவர் மணி அளித்த புகார்படி, வெங்கமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை