தேசிய அளவில் யோகா சேரன் பள்ளி மாணவி சாதனை
கரூர், கோவையில், 18வது தேசிய அளவில் யோகாசன சாம்பியன்ஷிப் -போட்டி நடந்தது. இதில், கரூர் வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஐந்தாம் வகுப்பு மாணவி சாய் தனிஷ்கா, இரண்டு பிரிவுகளில் முதலிடம், ஒரு பிரிவில் இரண்டாமிடம் பெற்று பரிசுகளை வென்றுள்ளார். ஸ்பாட் சாம்பியன்களில் தேர்ந்தெடுக்கப்பட்டு, சாம்பியன் ஆப் சாம்பியன்ஸ்-2025ல், முதலாவது பரிசை வென்றார். வெற்றி பெற்ற மாணவி, பயிற்சி அளித்த பயிற்சியாளருக்கு பள்ளியின் செயலர் பெரியசாமி, தாளாளர் பாண்டியன், பள்ளி முதல்வர் பழனியப்பன், தலைமை ஆசிரியை நளினி பிரியா ஆகியோர் பாராட்டுதல்களை தெரிவித்தனர்.