பைக் திருட்டு வாலிபர் புகார்
பைக் திருட்டுவாலிபர் புகார்கரூர், நவ. 16-சின்னதாராபுரம் அருகே, பைக் திருட்டு போய் விட்டதாக, போலீசில் வாலிபர் புகார் செய்துள்ளார்.கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் சிவக்குமார் என்பவரது மகன் சஞ்சய் குமார், 21; இவர் கடந்த, 14ல் காலை, வீட்டுக்கு முன்னால் பஜாஜ் பல்சர் பைக்கை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து பார்த்த போது, பைக்கை காணவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த சஞ்சய் குமார், போலீசில் புகார் செய்தார்.சின்னதாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.