உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

கரூர், ஜன. 4-கரூர் மாவட்டம், நன்னியூர் செவிந்திப்பாளையம் பகுதியை சேர்ந்த கேசவன் என்பவரது மகன் நந்தகுமார், 23; இவர் கடந்த, 2ல் அதிகாலை என்பீல்டு பைக்கில், வாங்கல் அருகே, தளவாப்பாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தார்.அப்போது, திடீரென பைக் நிலை தடுமாறியதால் கீழே விழுந்த நந்தகுமார், தலையில் பலத்த அடிபட்டு, அதே இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து, நந்தகுமாரின் தந்தை கேசவன் கொடுத்த புகாரின்படி, வாங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை